சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு சிபிஐவிடம் ஒப்படைக்கப்படும் – உச்சநீதிமன்றம்

Default Image

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு சிபிஐவிடம் ஒப்படைக்கப்படும்.

நடிகர் சுஷாந்த் சிங், மும்பையில் பாந்த்ரா பகுதியில் தான் தங்கியிருந்த வீட்டில்,  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  இவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே இவர் தற்கொலை செய்திருப்பார் எனவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், சுசாந்த் சிங் இறந்த போது, அவருடைய வீட்டில் அவருடன் நண்பர்களும் இருந்ததால், அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்த் சிங்கின் மரணத்தில் நாளுக்கு நாள், பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகிற நிலையில், நடிகர் சுஷாந்த் சிங், மரணம் குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என பீகார் அரசு பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், சுஷாந்த் சிங் மரணம்  வழக்கை சிபிஐ விசாரிக்க  வேண்டும் என பரிந்துரை செய்ததையடுத்து, பிரபல பாலிவுட் நட்சத்திரம் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கு சிபிஐவிடம் ஒப்படைக்கப்படும் என்று  உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
IND VS NZ CT 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay
gold price
Tamilisai Soundararajan Selvaperunthagai