ஆந்திராவில் தெலுங்குதேசம்- ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர்களிடையே மோதல் !தெலுங்கு தேசம் கட்சி தொண்டர் உள்பட 2 பேர் உயிரிழப்பு

Default Image

ஆந்திராவில் ஏற்பட்ட  மோதலில்  தெலுங்கு தேசம் கட்சி தொண்டர் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று தொடங்கி மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.முதல்கட்டமாக மக்களவை தேர்தல் இன்று (ஏப்ரல் 11 ஆம் தேதி) நடைபெறுகிறது.18 மாநிலங்கள் மற்றும் 2  யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 91 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

அசாம் 5,அருணாச்சல பிரதேசம் 2, ஆந்திரா 25, பீகார்  4, சத்தீஸ்கர் 1, ஜம்மு காஷ்மீர் 2, மகாராஷ்டிரா 7, மணிப்பூர் 1, மேகாலயா 2, மிசோரம் 1, நாகாலாந்து 1, ஒடிசா 4, சிக்கிம் 1, தெலங்கானா 17, திரிபுரா 1, உத்திரபிரதேசம் 8, உத்தராகண்ட் 5, மேற்கு வங்கம் 2, அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1, லட்சத்தீவுகள் 1 என்று  மொத்தம் 91 தொகுதிகளில் நடைபெறுகிறது.

அதேபோல்  அருணாச்சலப்பிரதேசம்,ஆந்திரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.

ஆனால் ஆந்திராவில் மட்டும் ஒரே கட்டமாக   25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும்  தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில்  ஆந்திராவில் உள்ள  அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தாடிபத்ரி பகுதியில் வாக்கு பதிவு நடைபெற்று கொண்டிருந்தது.அப்போது அந்த பகுதியில்   தெலுங்குதேசம்- ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில்  தெலுங்கு தேசம் கட்சி தொண்டர் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்