ஒலிம்பிக்கில் 4ஆம் இடம் பிடித்த இந்திய வீரர்களுக்கு கார் பரிசு..!டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!

ஒலிம்பிக்கில் 4-ஆம் இடம் பிடித்த இந்திய வீரர்களுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கார் பரிசாக அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஒலிம்பிக்கில் 4-ஆம் இடம் பிடித்த இந்திய வீரர்களுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கார் பரிசாக அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் 32 ஆவது போட்டி தற்போது நடந்து முடிந்துள்ளது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கு கொண்டு 7 பேர் பதக்கங்களையும் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்தனர். இதனை தொடர்ந்து இவர்களுக்கு ரொக்க பணம்,  கார், அரசு வேலை என பல்வேறு பரிசுகள் அறிவிக்கப்பட்டு குவிந்து வருகிறது.

இந்நிலையில் வெண்கல பதக்கத்தை நூல் இழையில் தவறவிட்டு 4 ஆம் இடம் பிடித்த இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா அல்ட்ராஸ் காரை பரிசாக அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இவர்கள் பதக்கத்தை வெல்லாமல் இருந்தாலும் கோடிக்கணக்கான இதயங்களை வென்றுள்ளனர்.

இவர்கள் பலருக்கு தற்போது ஊக்கமளித்துள்ளார்கள். மேலும், இந்த அறிவிப்பால் இவர்கள் அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கத்தை வெற்றிக்கொள்ள ஊக்கமளிக்கப்பதாக அமையும்  என்று தெரிவித்துள்ளனர்.

unknown node
ஒலிம்பிக்கில் 4ஆம் இடம் பிடித்த இந்திய வீரர்களுக்கு கார் பரிசு..!டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!