இன்று வானில் நிகழவுள்ள வளைய சூரிய கிரகணம்…! வெறும் கண்களால் பார்க்க கூடாது…!

Default Image
  • இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ உள்ளது.
  • சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. சூரியக் கண்ணாடி வாயிலாக மட்டுமே பார்க்க வேண்டும்.

சூரிய கிரகணம் என்பது சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு இருக்கும். அப்போது சூரிய ஒளியை நிலவு மறைப்பதால் அதன் நிழல் பூமியில் தெரியும் இது தான் சூரிய கிரகணம் என்கிறோம். அதன்படி இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ உள்ளது.

இது குறித்து கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கூறுகையில், சூரியனின் ஒரு பகுதியை மட்டும் நிலவு மறைப்பது பகுதி சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. நிலவு சூரியனை மத்தியில் மறைப்பதால் சூரியன் வளையம் போன்று தோன்றும். இது வளைய சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. வளைய சூரிய கிரகணம் என்பது சூரியனின் விளிம்பு மட்டும் தெரியுமாறு சூரியனின் 90% பகுதி முழுவதுமாக நிலவினால் மறைக்கப்படும் நிகழ்வாகும்.

இந்த சூரிய கிரகணம் இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளைத் தவிர வேறு எங்கும் காண இயலாது. இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இன்று மதியம் ஒன்று 1:42 மணிக்கு தொடங்கி மாலை 6:41 மணி வரை நிகழ உள்ளது. இதனை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. சூரியக் கண்ணாடி வாயிலாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சூரிய கிரகணமானது,கிரீன்லாந்து, ரஷ்யா போன்ற இடங்களில் இந்த வளைய சூரிய கிரகணம் தெரியும்.அதேநேரம், வடக்கு அலாஸ்கா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் பகுதி சூரிய கிரகணம் தெரியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்