சுத்தம் செய்ய தவறிய கழிவுநீர் ஒப்பந்ததாரர் தலையில் குப்பை கொட்டிய சம்பவம்..!

Default Image
  • கழிவுநீர் சுத்தம் செய்ய தவறிய ஒப்பந்ததாரர் தலையில் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் குப்பை கொட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணத்தால் பல்வேறு பகுதிகளில் மழைநீரோடு கழிவுநீரும் சேர்ந்துள்ளது. இதன் காரணத்தால் மும்பை கண்டிவாலா தொகுதியை சேர்ந்த மக்கள் சிவசேனை சட்டப்பேரவை எம்.எல்.ஏ. திலீப் லண்டேவிடம் புகார் அளித்துள்ளனர்.

இதனால் எம்.எல்.ஏ. திலீப் லண்டே கழிவுநீர் சுத்தம் செய்யும் ஒப்பந்ததாரரை கழிவுநீரில் அமர வைத்துள்ளார். மேலும், அவரது ஆதரவாளர்களிடம் குப்பைகளை அந்த ஒப்பந்ததாரர் தலையில் கொட்டுமாறு கூறியுள்ளார். உடனே, எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்களும் குப்பையை அந்த ஒப்பந்ததாரர் தலையில் கொட்டியுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், திலீப் லண்டேவின் இச்செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

india vs pakistan war
Indian Navy test-fires missile
Indian PM and Pakistan PM
Pahalgam Attack Victim son
Saifullah Kasuri
cake inside Pakistan High Commission