ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி..!

Default Image

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் ரவி சாஸ்திரியுடன் தொடர்பிலிருந்த பந்துவீச்சு பயிற்சியாளர் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், நிதின் படேல் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து இந்திய வீரர்களுக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, கொரோனா நெகட்டிவ் என வந்தவர்கள்  மட்டுமே 4 ஆவது டெஸ்ட் தொடரில் விளையாட அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்