புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை!

திகனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்களுக்கு (நவ.29, 30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

puducherry school leave

புதுச்சேரி :  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும்.

அதன் பிறகு, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடலோரப்பகுதிகளில், காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே 30-ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக புதுச்சேரியில் கனமழை பெய்து வரும் நிலையில், நாளை (நவம்பர் 29.11.2024) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, தொடர் மழை காரணமாக 27,28 ஆகிய தேதிகளிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை (29.11.2024) மற்றும் நாளை மறுநாள் (30.11.2024) ஆகிய இரண்டு நாட்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை மற்றும் நாளை மறுநாள்  புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 04 03 2025
IndvsAusSfinal
TN CM MK Stalin
steve smith travis head
Actress Vijayalakshmi
tvk vijay ADMK jayakumar
Russia-Ukraine war