கனமழையை எதிர்கொள்ள உதவி எண்களை அறிவித்த புதுச்சேரி ஆட்சியர்!

கன மழையை எதிர்கொள்ள பேரிடர் மேலாண்மைத் துறையின் உதவி அழைப்பு எண்களான 112 மற்றும் 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. எனவே, கனமழையை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி பேரிடர் மேலாண்மைத் துறை கனமழையை எதிர்கொள்ள உதவி அழைப்பு எண்கள் குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, 112 மற்றும் 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், பொது மக்களின் நலன் கருதி பிரத்தியேகமாக மெசேஜ் வடிவிலான புகார்களை மட்டும் பதிந்திட 9488981070 என்கிற whatsapp எண்ணினை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எனவே புதுசேரியில் வசிக்கும் மக்கள் கனமழையில் எதாவது உதவி வேண்டுமென்றால் இந்த எண்ணை தொடர்புகொண்டு உதவிகேட்டுக்கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Black paint DMK
sajjan kumar
Match abandoned due to rain
Wasim Akram
GK Mani home wedding ceremony - Jason sanjay - Vijay sethupathi - Tamilnadu CM MK Stalin
tvk vijay ntk seeman