மாணவர்களை சாதிப்பிரிவை குறிப்பிட்டு தகாத வார்த்தையால் திட்டிய பேராசிரியர்…!

Default Image

மாணவர்களை சாதிப்பிரிவை குறிப்பிட்டு தகாத வார்த்தையால் திட்டிய பேராசிரியர். 

கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில், பட்டியல் பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒரு வருட சிறப்பு ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகிறது. அவ்வாறு ஆன்லைன் வகுப்பு நடத்திய மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பிரிவு பேராசிரியர் சீமா அவர்கள் வகுப்பில் பங்கேற்ற மாணவர்களை வெட்கம்மற்றவர்கள் என்று தகாத வார்த்தையால் சாதிப் பிரிவை குறிப்பிட்டு திட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தேசிய கீதத்துக்கு மாணவர்கள் எழுந்து நிற்காத காரணத்தினால் ஆசிரியர் சீமா  இவ்வாறு திட்டியதாக கூறப்படுகிறது. ஆசிரியர் மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிற நிலையில், இந்த வீடியோ அந்த தொழில்நுட்ப கழக இயக்குனர் பார்வைக்கு சென்றுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் பாதிக்கப்பட்ட மாணவர்களையும் பேராசிரியர் அழைத்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. எங்கள் கல்விக்கூடத்தில் இதுபோன்று நடத்தைகளுக்கு இடமில்லை. இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்