பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி நிறுவனர்களுடன் இன்று ஆலோசனை…!

Default Image

பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி நிறுவனர்களுடன் இன்று ஆலோசனை. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் தனது தீவிர ஆட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், இந்தியாவில் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், தற்போது சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று பிரபல மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் உடன் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிப்பது, மூலப் பொருட்களின் தேவை உள்ளிட்ட  விவகாரங்கள் குறித்து பேசப்படும் என்று கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
chandrababu naidu
ChandrababuNaidu
IND VS NZ CT 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay