கழிப்பறை நீரில் செய்யப்பட்ட பானிபூரி! கடையை அடித்து நொறுக்கிய வாடிக்கையளர்கள்!

Default Image

கழிப்பறை நீரில் செய்யப்பட்ட பானிபூரி. கடையை அடித்து நொறுக்கிய வாடிக்கையாளர்கள். 

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, தெருவோரங்களில் விற்கப்படும் உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு.  ஆனால், அந்த உணவுகளின் தூய்மை குறித்து நாம் ஆராய்வதில்லை.

 அந்த வகையில் மும்பையில், கோல்ஹாப்பூரில், ரன்கலா ஏரிக்கு அருகில், ‘மும்பை கி ஸ்பெஷல் பானிபூரி வாலா’ என்ற கடை உள்ளது. இந்த கடை மிகவும் பிரபலமான கடை. இந்த கடையில் விற்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதால், பலரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. எப்போதுமே இந்த கடையில் கூட்டம் நிரம்பி வழியும்.

இந்நிலையில், இந்த கடை உரிமையாளர், பானிபூரி நீரில், கழிவறை நீரை கலந்தது, அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ஆத்திரமடைந்த கடை வாடிக்கையாளர்கள், கடையை அடித்து நொறுக்கி, பொருட்கள் அனைத்தையும் எடுத்து தெருவில்  வீசியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்