ஆளுநருக்கு எதிராக 6 மணிநேரத்துக்கும் மேலாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா!!

Default Image

எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்  என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 11ம் தேதி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்பேரில் டி.ஜி.பி சுந்தரி நந்தா அறிவித்திருந்தார்.

ஆனால் ஹெல்மெட் தலைக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், உடனே அபராதம் கூடாது என்று முதல்வர் நாராயணசாமி  தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பை ஆளுநர் ஏற்கவில்லை.இந்நிலையில்  முதலமைச்சரின் விருப்பத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அதிருப்தியடைந்தார்.

இதனால் கருப்பு சட்டை அணிந்து ஆளுநர் மாளிகைக்கு எதிரே தர்ணாவில் ஈடுபட்டார்.  அதேபோல் கிரண்பேடியை கண்டித்து 6 மணிநேரத்துக்கும் மேலாக நாராயணசாமி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.தர்ணாவில் இருந்துகொண்டே கோப்புகளில் கையெழுத்தும் செய்து வருகிறார்.

மேலும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.தங்களுடைய கோரிக்கை தொடர்பாக 6-ம் தேதி கடிதம் கொடுத்துள்ளோம் என்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்