ஊடக ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தார் – மோகன் பகவத் 

Default Image

ராஷ்டிரிய சுயம் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத் இன்று  சலப்புரத்தில் ‘கேசரி ஊடக ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மையத்தை’ திறந்து வைத்தார்.

பின்னர் அவர் கூட்டத்தில் பேசுகையில், 1951-ஆம் ஆண்டில் வெளியிடத் தொடங்கிய சங்க பரிவார் இணைந்த வார இதழான ‘கேசரி’ என்பது “பாரதத்தின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட” சில எண்ணங்களின் கூற்று என தெரிவித்தார்.

கடந்த 70 ஆண்டுகளில் ‘கேசரி’ பயணம் வசதியானதல்ல என்றும் இந்த உண்மையை தற்போதைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறினார்.

‘கேசரி’ நோக்கம் ‘தரமத்தின் வழியை நிறுவுவதாகும்’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், சில வெற்றிகளை நாம் அடைந்தாலும் பரவாயில்லை, தர்மத்தின் வழியை நிறுவுவதே கேசரியின் நோக்கம். எல்லா முரண்பாடுகளுக்கும் மத்தியிலும், தர்மத்தை அடைய எங்கள் இலக்குகளை அடைய முயற்சிக்க வேண்டும் என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்