சுஷாந்த் மரண வழக்கு: “தேநீரில் 4 சொட்டுகள் கலந்து அவரை குடிக்க விடுங்கள்”- அதிர்ச்சியளிக்கும் வாட்ஸ் ஆப் உரையாடல்கள்!

Default Image

நடிகை ரியா சக்ரபோர்த்தியின் வாட்ஸ்அப் உரையாடல்களை ஆய்வு செய்தபோது, அவர் போதைப்பொருட்கள் உபயோகித்து வந்தது தெரியவந்துள்ளது.

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் 14 -ம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் உயிரிழந்த வழக்கை தற்பொழுது சிபிஐ நடத்திவருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக பல மர்மங்கள் இருக்கும் நிலையில், நடிகை ரியா சக்ரபோர்த்தியின் மொபைல் தொலைபேசியிலிருந்து அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்பொழுது அவர் போதைப்பொருட்கள் உபயோகித்து வந்தது தெரியவந்துள்ளது.

அது எம்.டி.எம்.ஏ. மரிஜுவானா என்ற போதைப்பொருள் எனவும், அதனை ரியா அடிக்கடி பயன்படுத்தி வந்ததாகவும் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் வெளிச்சத்திற்கு வந்தது. ரியா, கவுரவ் அய்ரா என்ற போதைப்பொருள் வியாபாரியிடம் உரையாடினார். அந்த உரையாடலில் போதைப்பொருள் வியாபாரியிடம், “நாங்கள் கடினமான போதை மருந்துகளை வெகுவாக எடுத்துகொள்வது இல்லை. ஒரே ஒரு முறை எம்.டி.எம்.ஏ.-வை முயற்சித்தது உண்டு. உங்களிடம் எம்.டி. உள்ளதா?” என ரியா கேட்கிறார்.

மற்றொரு உரையாடலில், ரியா “மிராண்டா சுஷி” என அவரின் மொபைலில் பதிவு செய்திருந்தார். அந்த நபர், “ஹாய் ரியா, பொருள்கள் கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டது.” என கூறினார். மேலும், “ஷோய்கினின் நண்பரிடம் (ரியாவின் சகோதரர்) இதை எடுத்துக் கொள்ளலாமா? ” என கூறியுள்ளார்.

இதேபோல், ரியாவுக்கும் அவரது நண்பர் ஜெயா சஹாவுக்கும் இடையே நவம்பர் 25, 2019 அன்று நடந்த உரையாடல், ரியா மீது பல சந்தேங்களை ஏற்படுத்தி வருகிறது. அதில் ஜெயா, ரியாவிடம், “தேநீர் அல்லது சுடு நீரில் 4 சொட்டுகள் கலந்து, அதை அவரை குடிக்க விடுங்கள்” என ஜெய கூறியது அதிர்ச்சியளிக்கிறது. அதற்கு ரியா, “மிக்க நன்றி” என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்