மார்ச் 12 ஆம் தேதி முதுநிலை நீட் தேர்வு;இன்று முதல் விண்ணப்பம் – தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு!

Default Image

டெல்லி:முதுநிலை நீட் தேர்வு மார்ச் 12 ஆம் தேதி நடைபெறும் என்று மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

நடப்பு 2022 ஆம் ஆண்டில் MD,MS படிப்புகளில் சேர நடத்தப்படும் முதுநிலை நீட் தேர்வு ( NEET – PG ) வருகின்ற மார்ச் 12 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் கணினி அடிப்படையில் நடைபெறும் என்று மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி,முதுநிலை நீட் தேர்வுக்கு இன்று மாலை 3 மணி முதல் பிப்ரவரி 4 ஆம் தேதி இரவு 11:55 மணி வரை nbe.edu.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,மார்ச் 12 ஆம் தேதி நடைபெறும் முதுநிலை நீட் தேர்வின் முடிவுகள் மார்ச் 31 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்