கங்கனா ரணாவத் பங்களா இடிப்பு வழக்கு..! செப்டம்பர் 22-ம் தேதி வரை ஒத்திவைத்து உத்தரவு.!

Default Image

நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் மஹாராஷ்டிரா அரசு மற்றும் மும்பை போலீசார் விசாரித்த விதம் குறித்து நடிகை கங்கனா ரணாவத் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும்,  மும்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக கூறினார்.

இதனால், சிவசேனா கட்சி  தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மும்பை பாந்திரா பகுதியில் உள்ள கங்கனா பங்களாவில் சட்டவிரோதமாக கட்டுமானங்கள் நடந்துள்ளதாக கூறி  மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது.

நோட்டீஸ் குறித்து 24 மணி நேரத்தில் பதிலளிக்க கெடுவும் கொடுக்கப்பட்டது. ஆனால், கங்கனா பதிலளிக்கவில்லை இதனால், நேற்று முன்தினம் மாநகராட்சி அதிகாரிகள்  சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்படுவது குறித்து நோட்டீஸ் ஒட்டி பொக்லைன் இயந்திரம் மூலம் அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகளை இடித்தனர்.

இந்நிலையில், கங்கனா மும்பை உயர்நீதிமன்றத்தில் தனது பங்களா வீட்டில் இடிப்பு பணியை மேற்கொள்ள தடை விதிக்க மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மாநகராட்சி இடிப்பு பணிக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், கங்கனா ரணாவத் இடிப்பு விவகாரம் தொடர்பான வழக்கை செப்டம்பர் 22-ம் தேதி வரை ஒத்திவைத்தது மும்பை உயர் நீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
veera dheera sooran S. J. Suryah
Nagpur Violence
chennai budget
hardik pandya and suryakumar yadav
Puducherry CM Rangasamy
RRB alp exam