இந்திரா காந்தியின் 36-வது நினைவு தினம்.. பிரதமர் மோடி அஞ்சலி.!

Default Image

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி.

1984-ம் ஆண்டு பிரதமராக பதவி வகித்த திருமதி.இந்திராகாந்தி அவர்கள், மெய்காப்பாளரால் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், நாடு முழுவதும், இவரது 36-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிற நிலையில், இந்திய பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘நம் முன்னாள் பிரதமர் திருமதி இந்திராகாந்திஜீ அவர்களின் நினைவுதினத்தில், அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மான் கி பாத் வானொலி உரையாடலில், இந்திராகாந்தியின் நினைவுதினத்தை முன்னிட்டு, அஞ்சலி செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்