வடக்கு சிக்கிமில் வழிதவறிய சீன மக்களை மீட்ட இந்திய ராணுவம்!

Default Image

வடக்கு சிக்கிமில் வழிதெரியாமல் தவித்த சீனர்களை இந்திய ராணுவம் மீட்டுள்ளது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் பதற்றமான சூழ்நிலை நிலவி வரக் கூடிய நிலையில் நேற்று முன்தினம் வடக்கு சிக்கிமின் பீடபூமி பகுதியில் 17 ஆயிரத்து 500 அடி உயரத்தில் மூன்று சீன குடிமக்கள் வழிதவறி மாட்டி கொண்டுள்ளனர். இந்நிலையில் அவ்விடத்திற்கு விரைந்த இந்திய ராணுவம் அவர்களை மீட்டு உதவி செய்துள்ளது.

பூஜ்ஜிய வெப்பநிலையில் சிக்கிக் கொண்டிருந்த சீன மக்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து இந்திய ராணுவம் அவர்களுக்கு ஆக்சிஜன் உணவு மற்றும் உடைகள் கொடுத்து சரியான வழியை காட்டி அவர்களை அனுப்பி வைத்துள்ளது. உதவியைப் பெற்றுக் கொண்ட குடிமக்கள் இந்தியாவுக்கும் இந்திய ராணுவத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07042025
Rahul Gandhi
Edappadi Palanisamy - MK Stalin
R Ashwin
edappadi palaniswami sengottaiyan
TN BJP Leader Annamalai - BJP MLA Nainar Nagendran
UttarPradesh - Mosque