“தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவரை நாடு இழந்துவிட்டது!” – குடியரசு தலைவர்

Default Image

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் மறைவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்க்கு டெல்லி உள்ள தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து மருத்துவமனனயில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

அவர் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை தெரிவித்தார்.

அந்த பதிவில் அவர், நமது நாடு ஒரு தொலைநோக்கு பார்வைகொண்ட தலைவரை இழந்துவிட்டது. நாடாளுமன்றத்தில் நீண்ட நாட்களாக தனது பணியை சிறப்பாக ஆற்றியவர். மேலும், ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக விளங்குபவர் என தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்