ஹர்ஷவர்தன் WHO அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக தேர்வு.!

Default Image

WHO அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்த்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் குழுவில் 34 நாடுகள்   உறுப்பினர்களாக உள்ளது.  இந்த குழுவிற்கு தலைவராக ஜப்பான் நாட்டை சார்ந்த ஹிரோகி உள்ளார். இந்நிலையில் WHO அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்த்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிர்வாக வாரியத்தலைவர் தேர்வு வருடத்திற்கு ஒருமுறை பிராந்திய குழுக்களிடையே சுழற்சி முறையில் நடைபெறும்

 உலக சுகாதார அமைப்பின் மாநாடு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் அப்போது பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. WHO அமைப்பின் நிர்வாக வாரிய தலைவர் தேர்தல் குறித்து கடந்த வருடம் மே மாதம் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தியாவிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற முடிவின் பெயரில் ஹர்ஷவர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்