யூனிட் சைட்டேசன் விருதை பெரும் அபிநந்தன் படைப்பிரிவு

Default Image

அபிநந்தன் இடம்பெற்றிருந்த படைப்பிரிவுக்கு விமானப்படையின் யூனிட் சைட்டேசன் என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது
பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காஷீமீர் புல்வாமா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து இந்திய ராணுவம் விமானப்படையின் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலின் போது, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி கொண்டார். பிறகு இவரை 58 மணிநேரம் கழித்து பாகிஸ்தான் ராணுவம் இவரை விடுவித்தது. இதன் பிறகு இந்திய ராணுவம் பல விசாரணைகளுக்கு பிறகு இந்திய ராணுவத்தில் அபிநந்தனை சேர்த்தனர்.
இந்த நிலையில் அபிநந்தன் இடம்பெற்றிருந்த  படைப்பிரிவுக்கு விமானப்படையின் யூனிட் சைட்டேசன் என்ற விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விருதை 51-வது படைப்பிரிவு குழுவின் தலைவர் கேப்டன் சதீஷ் பவார் பெற்று கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்