மக்களே ஒரு குட் நியூஸ்..! இந்தியாவில் 400-க்கு கீழ் குறைந்த கொரோனா பலி எண்ணிக்கை...!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,457 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 375 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,457 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 375 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,23,93,286 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 34,457 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 2,114 குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,23,93,286 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 375 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,33,964 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 36,347பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,15,97,982 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,61,340 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை57,61,17,350பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 36,36,043 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.