ககன்யான் திட்டம் தாமதமாக வாய்ப்பு உள்ளது – இஸ்ரோ தலைவர் சிவன்

Default Image

ககன்யான் திட்டம் தாமதமாக வாய்ப்பு உள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 

இந்தியா 2022-ஆம் ஆண்டு விண்வெளிக்கு  4 வீரர்களை அனுப்ப திட்டமிட்டு இதற்கு ககன்யான் என பெயரிடப்பட்டது.இந்த திட்டத்தை இந்தியா சிறப்பாக நிறைவேற்ற ரஷ்யாவும்  உதவ முன்வந்தது.இதனால் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க  இந்திய நிறுவனமான  இஸ்ரோ ,ரஷ்ய  நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.இந்த நிறுவனம் இந்திய வீரர்கள் 4 பேருக்கும் பயிற்சி அளித்து.தற்போது  முதற்கட்ட பயிற்சியை நிறைவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில்,விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் தாமதமாக வாய்ப்பு உள்ளது. கொரோனா பரவல் காரணமாக ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணிகள் தொய்வடைந்துள்ளது .இதனால் ககன்யான் திட்டம் தாமதமாகலாம்.இதனால்  குறித்த காலத்திற்குள் ககன்யான்  திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. “நாங்கள் ஆரம்பத்தில் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ககன்யான் திட்டத்தை  செயல்படுத்த இலக்காகக் கொண்டிருந்தோம்  என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்