புதுச்சேரியின் முன்னாள் அமைச்சர் காலமானார்..! புதுச்சேரி முதல்வர் இரங்கல்..!

Rangasamy

புதுச்சேரியின் முன்னாள் அமைச்சர் கண்ணன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, மூச்சு விடுவதில் சிரமப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவர் மூல குலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே காலமானார். முன்னாள் அமைச்சர் கண்ணன் அவர்கள் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவராகவும், சபாநாயகர் போன்ற பதவிகளை வகித்து வந்துள்ளார்.

ஜவுளி நிறுவனங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – வானதி சீனிவாசன்

இவரது மறைவுக்கு புதுச்சேரி அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இவரது மறைவுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்த இரங்கல் பதிவில், புதுச்சேரி மக்களின் நலனுக்காக மாநில வளர்ச்சிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் கண்ணன். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. குடும்பத்தாருக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்