பொதுமக்கள் கவனத்திற்கு..! அடுத்த வாரம் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை..!

Default Image

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்தில் பொது மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கான விடுமுறைப் பட்டியலை வெளியிடுகிறது. நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளும் இந்த அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும்.

மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும், மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகளும் மூடப்பட்டிருக்கும். இந்நிலையில் மார்ச் 3ம் வாரத்தில் வங்கிகளுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

  • மார்ச் 17, 2022, வியாழன் – ஹோலிகா தகனைக் கொண்டாட டெஹ்ராடூன், கான்பூர், லக்னோ, ராஞ்சியில் வங்கிகள் மூடப்படும்.
  • மார்ச் 18, 2022, வெள்ளி – ஹோலி காரணமாக அகமதாபாத், ஐஸ்வால், பேலாப்பூர், போபால், சண்டிகர், டேராடூன், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பனாஜி, பாட்னா, ராய்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்படும்.
  • மார்ச் 19, 2022, சனிக்கிழமை – ஹோலி/யோசாங் காரணமாக புவனேஸ்வர், இம்பால், பாட்னாவில் வங்கிகள் மூடப்படும்.
  • மார்ச் 20, 2022, ஞாயிறு – வங்கி விடுமுறை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்