பெங்களூரு விமான கண்காட்சியில் திடீர் தீவிபத்து!! 100க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்!!

Default Image
  • பெங்களுருவில்   விமான கண்காட்சி நடைபெற்று வருகின்றது .
  • விமான கண்காட்சி நடைபெறும் இடம் அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்திய பாதுகாப்பு துறை சார்பில் ஆசியாவிலே மிகப்பெரிய விமான கண்காட்சி கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஏரோ இந்தியா 2019 என்ற பெயரில் நடைபெறுகின்றது.
இந்த விமான சாகச கண்காட்சியில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த ரஃபேல் போர் விமானமும் பங்கேற்றுள்ளது.இதை கண்டு கழித்தவர் விமான கண்காட்சியை போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.

 

மேலும் இதில் டார்மியர், சி-17, துருவ் ஹெலிகாப்டர்கள், சு-30 விமானங்கள், உள்ளிட்ட போர் விமானங்கள் வானத்தில் வர்ண ஜாலம் நிகழ்த்தியது பார்வையாளர்களை கவர்ந்தது. மேலும் அந்த விமானங்கள் வானில் வெண் புகையை கக்கியப்படி கோடு போட்டும், வட்டமிட்டும் சென்றது பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

இந்தநிலையில் இது ஒருபுறம் இருக்க  இன்று  விமான கண்காட்சி நடைபெறும் இடம் அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்துள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார்கள் அனைத்தும் விமான கண்காட்சியை பார்க்க வந்த பார்வையாளர்களின் கார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்