பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு..!

Default Image

சமீபத்தில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வேளாண் மூன்று மசோதாகளை நிறைவேற்றியது. இந்த மசோதாக்கள், விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாகவும், இதனை திரும்பபெறக்கோரி எதிர்க்கட்சியினர் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி கொண்டே வருகின்றனர்.

இந்நிலையில், பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத், தனது ட்விட்டர் பக்கத்தில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை “பயங்கரவாதிகள்” என விமர்சித்து இருந்தார். மேலும், அந்த பதிவில், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தவறான தகவலை பரப்பி கலவரத்தை ஏற்படுத்திய நபர்கள், தற்போது வேளாண் சட்டத்திற்கு எதிராகவும் தவறான தகவல்களை பரப்பிக்கொண்டு தேசத்தில் பயங்கரவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றதாகவும், அவர்கள் பயங்கரவாதிகள் என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, கர்நாடக மாநிலம், துமகுரு நீதிமன்றத்தில் நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்கறிஞர் எல் ரமேஷ் நாயக் கடந்த மாதம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கங்கனா ரணாவத் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடக காவல்துறை கங்கனா கங்கனா ரணாவத் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
US President Donald Trump - Elon musk
Sexual harassment
telangana tunnel collapse
Earthquake - BayofBengal
Pakistan vs Bangladesh 2025