வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் பிசியோதெரபிஸ்ட்...!

வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் பிசியோதெரபிஸ்ட்.

வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் பிசியோதெரபிஸ்ட்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் தற்காலிக ஊழியராக நீரு சோனி (42) பெண் பணிபுரிந்து வந்துள்ளார். சோனி தனது கணவர் புனித் சேதியாவுடன் வசித்து வந்தார். அவர் மருத்துவமனையின் தடயவியல் துறையில் மருத்துவராக இருந்துள்ளார். இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், நீரு சோனி, மதியம் வேலை முடிந்து வீடு திரும்பிய பின்னர் சிறிது நேரம் அமர்ந்து கணவர் மற்றும் குழந்தைகளுடன் உரையாடி உள்ளார். பின் சோனி தனது அறைக்கு சென்றுள்ளார். அவளுடைய குழந்தைகள் அவளை பார்க்க சென்ற போது, சோனி விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனையடுத்து, உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

போலீசார் இதுகுறித்து கூறுகையில், சோனியின் இந்த நடவடிக்கைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. தற்கொலைக்கான எந்த கடிதமும் கிடைக்கவில்லை. வேலை செய்யும் இடத்தில் ஏதேனும் தொந்தரவுகள் இருந்திருக்கலாம் என அதிகாரிகள்  சந்தேகிக்கின்றனர்.