தங்க கடத்தல்.. தேடப்பட்டு வந்த பைசல் பரீத் கைது..!

Default Image

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில்  வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தியது தெரிய வந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தூதரக முன்னாள் ஊழியர்களான சரித், ஸ்வப்னா சுரேஷ், அவருடைய உறவினர் சந்தீப் நாயர் ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

அதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் உள்பட 3 பேரையும் வருகிற 21-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால், என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுவரை இந்த  கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்ட 15 பேர் கைதுசெய்துள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பைசல் பரீத் என்பவரை துபாய் போலீசார் கைது செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்