பெங்களுருவில் மூன்றாவது நாளாக விமான கண்காட்சி…!!

Default Image
  • பெங்களுருவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக விமான கண்காட்சி நடைபெற்று வருகின்றது .
  • விமானங்கள் வெண் புகையை கக்கியப்படி வானில் கோடு போட்டும், வட்டமிட்டும் பார்வையாளர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்தது
இந்திய பாதுகாப்பு துறை சார்பில் ஆசியாவிலே மிகப்பெரிய விமான கண்காட்சி கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஏரோ இந்தியா 2019 என்ற பெயரில் நடைபெறுகின்றது.இந்த கண்காட்சியில் அதிநவீன ரக விமானங்கள் விண்ணில் சாகசம் நிகழ்த்தின.
இந்த விமான சாகச கண்காட்சியில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த ரஃபேல் போர் விமானமும் பங்கேற்றது.வானத்தில் ஒன்றன்பின் ஒன்றாக விமானங்கள் நடத்திய இந்த கண்காட்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.இதை கண்டு கழித்தவர் விமான கண்காட்சியை போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.

 

இந்தநிலையில் நேற்று3-வது நாளாக விமான கண்காட்சியின்  நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் டார்மியர், சி-17, துருவ் ஹெலிகாப்டர்கள், சு-30 விமானங்கள், உள்ளிட்ட போர் விமானங்கள் வானத்தில் வர்ண ஜாலம் நிகழ்த்தியது பார்வையாளர்களை கவர்ந்தது. மேலும் அந்த விமானங்கள் வானில் வெண் புகையை கக்கியப்படி கோடு போட்டும், வட்டமிட்டும் சென்றது பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்