அருணாச்சலப்பிரதேசத்தில் நிலநடுக்கம்..!

அருணாச்சலப்பிரதேசத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அருணாச்சலப்பிரதேசத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை 5.35 மணியளவில் அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள சங்லாங் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4  ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.