போதைப்பொருள் கடத்தல் விவகாரம்.! கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனா கல்ராணி.!

Default Image

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் மீண்டும் ஒரு கன்னட நடிகையான சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னட திரைப்பட தயாரிப்பாளரும், பத்திரிக்கையாளருமான இந்திரஜித் லங்கேஷ் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் கன்னட திரையுலகில் உள்ள 15 நடிகை மற்றும் நடிகர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும், சிலர் போதை பழக்கம் உடையவர்கள் என்றும் குற்றம்சாட்டினார். அதனையடுத்து அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடர்ந்து ராகினி திவேத் மற்றும் சஞ்சனா கல்ராணிக்கு நேரில் ஆஜராக கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் ஆஜராகாத நிலையில் கடந்த வாரம் பெங்களூர் எலகங்காவில் உள்ள வீட்டில் வைத்து ராகினி திவேத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து தற்போது பிரபல நடிகையான நிக்கி கல்ராணியின் சகோதரியும், கன்னட த
நடிகையுமான சஞ்சனா கல்ராணியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதனையடுத்து பெங்களூர் இந்திரநகரில் உள்ள அவரது வீட்டிலிருந்து சஞ்சனா கல்ராணியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதுவரை போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் ராகினி திவேத் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்