போதை பொருள் – ரியா வீட்டில் பரிசோதனை.!

Default Image

போதை பொருள் தடுப்பு போலீசார் ரியா வீட்டில் பரிசோதனை செய்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14 ம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மும்பை போலீசார் சுஷாந்த் சிங் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி உள்பட பலரிடம் விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்தனர்.

இதற்கிடையில், தன் மகன் மரணத்தில் அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்திக்கு தொடர்பு உள்ளதாக சுஷாந்த் சிங்கின் தந்தை கிஷோர் சிங் கொடுத்த புகாரின் அடிப்படையில், பாட்னா போலீசாரும் விசாரணை மேற்கொண்டது. சுஷாந்த் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை செய்தது.

இதையடுத்து, பீகார் அரசு பரிந்துரையை மத்திய அரசு ஏற்று கொண்டது. இதனால், சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. சமீபத்தில்  நடிகை ரியா சக்ரபோர்த்தியின் மொபைல் தொலைபேசியிலிருந்து அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்பொழுது அவர் போதைப்பொருட்கள் உபயோகித்து தெரிய வந்துள்ளது.

இதனால், ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் சோவிக் சக்ரபோர்த்தி உட்பட சிலர் மீது போதை பொருள் கட்டுப்பாட்டு துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில், போதை பொருள் தடுப்பு போலீசார் ரியா வீட்டில் பரிசோதனை செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
PM Modi Soudi to Delhi visit
thirumavalavan amit shah
Kashmir Attack
Go tell this to Modi
Sketches of terrorists
Terrorist Attack