காய்கறி,சாப்பாடு, போன்று இனி டீசலும் டோர் டெலிவரி சர்வீஸ்-இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அறிமுகம்

Default Image

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம், தன்னுடைய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் டோர் டெலிவரி மூலம், டீசலை வீட்டிற்கே கொண்டு வரும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் முன்னணி பெட்ரோலிய நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம், புதுமையாக வீட்டிற்கே வந்து டீசலை டெலிவரி செய்ய துவங்கியுள்ளது. இதற்காக, டீசல் டேங்கர் லாரியில், டிஸ்பென்சர் பொருத்தப்பட்டுள்ள வாகனத்தை, இந்தியன் ஆயில் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இத்திட்டமானது முதற்கட்டமாக, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவை, விரைவில் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சேவை டீசலுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும், இந்த டீசல் டோர் டெலிவரி மூலம், பஸ், டிரக் உள்ளிட்ட வாகன உரிமையாளர்களின் நேரம் மற்றும் பணம் சேமிக்கப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்