டெல்லியில் மெட்ரோ ரயில் மற்றும் அரசுப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
unknown nodeடெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில் பெண்களுக்காக புதிய போக்குவரத்து திட்டத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.அதில், டெல்லியில் மெட்ரோ ரயில் மற்றும் அரசுப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இலவச பயணத்தை விரும்பாத பெண்கள் டிக்கெட் வாங்கி பயணிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. 700 கோடி டெல்லி அரசுக்கு கூடுதலாக செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு செலவையும் டெல்லி அரசு ஏற்கும் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.