ஏழுமலையான் கோயிலில் 21ம் தேதி வரை தரிசனம் ரத்து.!

Default Image

நாடு முழுவதும் வருகிற 21-ஆம் தேதி காலை 10.18  மணி முதல் பிற்பகல் 1.38 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்வு நடைபெற உள்ளது இதனால் ஏழுமலையான் கோயிலில் வரும் 20ம் தேதி இரவு 8.30 மணிக்கு ஏகாந்த சேவையுடன் கோயிலும் மூடபடவுள்ளது

ஜூன் 21ம் தேதி மதியம் 2.30 மணி அளவில் கோவில் திறக்கப்பட்டு மாலை 6 மணி வரை சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாதம் தோமாலை அர்ச்சனை உள்ளிட்ட சேவைகளில் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்று செய்ய உள்ளனர். இந்நிலையில் இரவு 8 மணி முதல் 8 30 வரை ஏகாந்த சேவையுடன் கோயில் மூடப்படுகிறது. எனவே வரும் 21 ஆம் தேதி அன்று ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யும் முழுவதுமாக ரத்து செய்ய படுகிறது.

சூரிய கிரகணத்தின்போது தரிசன கொண்ட வெங்க மாம்பா , அன்னபிரசாத பவன் மற்றும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் போன்ற இடங்களிலும் அன்னப் பிரசாதம் வழங்கப்படாது என்பதை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்