கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பின்னும் தொடரும் ஆபத்து…! மஹாராஷ்டிராவில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 52 பேர் பலி…!

Default Image

மகாராஷ்டிராவில், கடந்த ஆண்டு முதல் இதுவரை  52 பேர் இந்த கருப்பு பூஞ்சை நோய் தாக்கி பலியாகியுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.   இந்நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் மற்றும் அதில் இருந்து மீண்டவர்கள் சிலர் மியூக்கோர்மைகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆளாகி வருகின்றனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதில் இருந்து மீண்டவர்கள் அதிகப்படியான ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இந்த நோய் தாக்குவதாக கூறப்படுகிறது. தலைவலி, காய்ச்சல், சைனஸ் மண்டலத்தில் பாதிப்பு,  கண்களுக்கு கீழ் வலி மற்றும் பகுதி அளவில் பார்வை குறைபாடு போன்ற பிரச்சினைகள் இந்த பூஞ்சை பாதிப்புக்கு முக்கியமான அறிகுறியாகும்.

இந்தியாவில் தொற்று அதிகமாக காணப்படும் மகாராஷ்டிராவில், கடந்த ஆண்டு முதல் இதுவரை  52 பேர் இந்த கருப்பு பூஞ்சை நோய் தாக்கி பலியாகியுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், கருப்பு பூஞ்சை நோயை எவ்வாறு கண்டறிவது மற்றும் தடுப்பது குறித்த பயனுள்ள உதவிக்குறிப்புகளை தனது ட்வீட்டர் பக்கத்தில் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்