தனது வளர்ப்பு நாய் பிறந்தநாளுக்கு 100 கிலோ கேக் வெட்டி..! 4,000 பேருக்கு விருந்தளித்த தொழிலதிபர்…!

Default Image

கர்நாடகாவில் வளர்ப்பு நாயின் பிறந்தநாளை கொண்டாட 100 கிலோ கேக் வெட்டி, 4000 பேருக்கு விருந்தளித்த தொழிலதிபர். 

கர்நாடக மாநிலம் பெலகவி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் சிவப்பா மர்தி. இவர் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் ஆவார். இவர் தனது வீட்டில் செல்லமாக ஒரு நாயை வளர்த்து வந்துள்ளார். இந்த நாய்க்கு கிராஸ் என்று பெயர் சூட்டியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று இந்த வளர்ப்பு நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடுவதற்காக கிராமத்தில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து, நான்காயிரம்பேருக்கு விருந்து அளித்துள்ளார். பின்னர் 100 கிலோ எடை கொண்ட கேக்கை பொதுமக்கள் முன்னிலையில் வெட்டி வளர்ப்பு நாயின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி உள்ளார். தொழிலதிபரின் இந்த செயலை கண்ட கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்