Boycott China: கொல்கத்தா விமான நிலையத்தில் சீனப் பொருட்களைத் தடுக்கும் சுங்கத்துறையினர்..!

Default Image

இந்தியா-சீனா இடையே நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்த சம்பவம், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன்காரணமாக, சீனப் பொருட்களைத் தடை செய்ய வேண்டும் என்ற குரல், கடந்த சில நாள்களாக ஓங்கி உள்ளது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சீனப் பொருட்கள் வருவது குறித்து ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன. அதில், கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பொருட்களுக்கு சுங்கத்துறையினர் அனுமதி வழங்குவதை நிறுத்தினர்.

மேலும், மும்பை மற்றும் சென்னையில் உள்ள ஒரு சில துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களிலும் சீனா பொருட்களுக்கு அனுமதி வழங்குவதை நிறுத்தியுள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம், ஒரு செய்தியினை வெளியிட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்