#Breaking : அமர்நாத் குகைகளில் மேக வெடிப்பு.. இதுவரை 5 பேர் பலி..?

Default Image

அமர்நாத் குகை அருகே மேக வெடிப்பு ஏற்பட்டதில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 5 பேர் இறந்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அமர்நாத் யாத்திரை கடந்த 2 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த வருடம் அந்த யாத்திரை கடந்த 30ஆம் தேதி தொடங்கியது.

அந்த யாத்திரையில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த அமர்நாத் பகுதியில் கடுமையான மழைப்பொழிவு காரணமாக மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் அமர்நாத் குகைக்கு அருகே இருந்தவர்கள் அந்த மேக வெடிப்பில் சிக்கி மாற்றிக்கொண்டனர். இதில் இதுவரை 5 பேர் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.மேலும் அதில் சிக்கியுள்ளவர்களை மீட்க ஹெலிகாப்டர் மூலம் மீட்பு குழு விரைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்