சத்தீஸ்கர், மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் – வாக்குப்பதிவு நிலவரம்!

election voting

சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதில், சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 20 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில், 12 மாவட்டங்கள், மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள பஸ்தார் பிராந்தியத்தில் உள்ளன.

இந்த பகுதியில் மொத்தம் சுமார் 2,900 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில், இதில் 650 வாக்குசாவடிகள் பதற்றம் நிறைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகிறது. இதுபோன்று, மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு  நடைபெற்று வருகிறது. மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 1276 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சத்தீஸ்கரில் குண்டுவெடிப்பு..! சிஆர்பிஎஃப் வீரர் காயம்..!

இதன் நிலையில், சத்தீஸ்கரில் முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கும், மிசோராமத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவின் 9 மணி நிலவரம் குறித்து பார்க்கலாம். அதன்படி, காலை 9 மணி நிலவரப்படி மிசோரம் மாநிலத்தில் 12.80% வாக்குகள் பதிவாகியுள்ளது. சத்தீஸ்கரில் 9.93% வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும், நாகாலாந்தின் தாபி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 29.03% வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்