ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட சொல்லி கார் ஓட்டுநர் கொலை – மகனின் தொலைபேசியில் பதிவாகிய ஆடியோ!

Default Image

நொய்டாவில் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டபடி கார் டிரைவரை கொலை செய்துள்ளனர்.

நொய்டாவில் உள்ள திரிலோக்புரியில்  வாசிக்க கூடிய கார் டிரைவர் அப்தாப் என்பவரை ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் இடுமாறு கட்டாயப்படுத்தி கொலை செய்துள்ளதாக அவரது 20 வயது மகன் முகமது சபீர் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சபீர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில்,  எனது தந்தை தனது பழைய வாடிக்கையாளர்கள் ஒருவரை புலந்த்ஷார் எனும் இடத்தில் நேற்று மதியம் 3 மணிக்கு இறக்குவதற்காக சென்றிருந்தார். இந்நிலையில் 7.30 மணி அளவில் அவர் என்னை அழைத்து தனது ஃபாஸ்ட்ராக்கை ரீசார்ஜ் செய்யுமாறு கூறினார்.

அதன் பின்பு சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் எனக்கு அவரது தொலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது. அது ஒரு சுங்க சாவடி அருகில் இருந்து வந்தது என நான் நினைக்கிறேன், அப்பொழுது வந்த ஆண்கள் மீது சந்தேகம் வந்ததன் பேரில் எனது தந்தை எனக்கு போன் செய்து தனது சட்டைப்பையில் வைத்து இருக்கலாம் என இறந்தவரின் மகன் சபீர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அப்பாவுக்கு ஆபத்து இருப்பதாய் உணர்ந்த நான் அந்த அழைப்பை பதிவு செய்தேன். மேலும் அப்பா தனது சொந்த வண்டியில் இருக்கும் பொழுது யாரோ இருவர் வந்து ஜெய் ஸ்ரீராம் எனம் அவரை கூறச் சொல்லி கட்டாயப்படுத்தி கொலை செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து போலீசார் தேடி பார்த்த பொழுது அதன் பின் சொந்த வண்டியின் பக்கத்திலேயே அவர் கட்டப்பட்டு உயிரிழந்திருப்பத்தை கண்டுபிடித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் குடிபோதையில் இருந்ததாகவும், வண்டியை திருடுவதற்காக அவரை கொலை செய்துள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 302 கொலை வழக்கின் கீழ் வடக்கு காவல் நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்