ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட சொல்லி கார் ஓட்டுநர் கொலை – மகனின் தொலைபேசியில் பதிவாகிய ஆடியோ!

நொய்டாவில் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டபடி கார் டிரைவரை கொலை செய்துள்ளனர். நொய்டாவில் உள்ள திரிலோக்புரியில்  வாசிக்க கூடிய கார் டிரைவர் அப்தாப் என்பவரை ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் இடுமாறு கட்டாயப்படுத்தி கொலை செய்துள்ளதாக அவரது 20 வயது மகன் முகமது சபீர் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சபீர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில்,  எனது தந்தை தனது பழைய வாடிக்கையாளர்கள் ஒருவரை புலந்த்ஷார் எனும் இடத்தில் நேற்று மதியம் 3 மணிக்கு … Read more

துணை முதல்வர் ஓபிஎஸ்-ன் கார் ஓட்டுநர் மகள் தற்கொலை!

துணை முதல்வர் ஓபிஎஸ்-ன் கார் ஓட்டுநராக பணிபுரிபவர் பாஸ்கர். இவர் சென்னை  சைதாப்பேட்டையில் பேட்டையில் உள்ள பொதுப்பணித்துறை உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது மகள் நிவேதிதா 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நிவேதிதா நேற்று  திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகினறனர்.