இந்திய அரசை பாராட்டிய கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ..!

Default Image

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முடிவெடுத்து செயல்படும் இந்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு பிரபலங்கள் பலர் தங்களது கண்டனக் குரலை எழுப்பி வருகிறனர்.

மத்திய அரசு விவசாயிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இதற்கு எந்த தீர்வும் இதுவரை எட்டப்படவில்லை. சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள இந்த விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பல தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் கூறுகையில், ‘ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முடிவெடுத்து செயல்படும் இந்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவ திறனும், பிரதமர் மோடியின் தலைமையும் தொற்றுநோய்க்கு உலகிற்கு முக்கியமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.’ வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு விவசாயிகளுடன் 11 கட்ட பேச்சுவார்த்தைகள் இதுவரை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 16042025
Nellai Iruttukadai Halwa shop
mayank yadav brother
Actor Sri
TN CM MK Stalin speech in TN Assembly
Edappadi Palaniswami
PMK Leader Anbumani ramadoss Press meet