கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

Default Image

டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் தலைநகரான டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.தற்போதைய நிலவரப்படி அங்கு 41,182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் மருத்துவக்குழு ஜூலை மாதத்துக்குள் டெல்லியில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தது .

இதனால் நேற்று  டெல்லி துணைநிலை ஆளுநர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஹர்ஷ்வர்தன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.இதனையடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.இந்த கூட்டத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி,பாஜக ,காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க உள்ளது.  

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்