8 வயது மகனை மின்விசிறியில் தூக்கிலிட்ட கொடூர தந்தை ....!

A man from Rajasthan has hanged his 8-year-old son on a fan.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது 8 வயது மகனை மின்விசிறியில் தூக்கிலிட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவன் முறையாக வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதற்காக அவரது தந்தை செய்துள்ள செயல் பலரையும் பதைபதைக்க வைத்துள்ளது. சிறுவன் பள்ளி வீட்டு பாடத்தை முடிக்கவில்லை என்பதற்காக, தனது மகனின் கைகளையும் கால்களையும் கட்டி மின்விசிறியில் சிறுவனை தூக்கிலிட்டதாக கூறப்படுகிறது.

அதன் பின்பும் அவர் குழந்தையை தடியால் அடிக்க முயன்றுள்ளார். ஆனால் அவரது மனைவி தடுத்துள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோவை சிறுவனின் தாய் பதிவு செய்து வைத்துள்ளார். தூக்கிலிடும் பொழுதே தனது தந்தையிடம் வேண்டாம் என சிறுவன் கெஞ்சியதாகவும், தொலைபேசியை ஜன்னலில் வைத்துவிட்டு கணவர் செய்த செயலுக்கு உடந்தையாக இருப்பது போல நடித்ததாகவும் போலீசாரிடம் அவரது மனைவி கூறியுள்ளார்.