#Breaking:உஷாரா இருங்க…ஒரே நாளில் 13 ஆயிரத்தை தாண்டிய கொரோனா;38 பேர் பலி!

Default Image

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 12,249 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் 13,313 ஆக அதிகரித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,33,44,958 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

  • மேலும்,கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 13 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆக அதிகரித்துள்ளது. மேலும்,இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,941 ஆக பதிவாகியுள்ளது.
  • அதைப்போல,கடந்த ஒரே நாளில் 10,972 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,27,36,027 ஆக பதிவாகியுள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 83,990 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாட்டில் இதுவரை 1,96,62,11,973 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும்,இந்தியாவில் ஒரே நாளில் 14,91,941 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்