#BREAKING: நாசிக் வாயுக்கசிவு.., உயிரிழப்பு 22 ஆக உயர்வு..!

நாசிக் ஆக்சிஜன் வாயுக்கசிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  22 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ஜாகிர் உசேன் மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு டேங்கரில் மொத்தமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த டேக்கரில் இருந்து சிலிண்டர்களுக்கு ஆக்சிஜன் வாயு மாற்றப்பட்ட போது எதிர்பாராத விதமாக கசிவு ஏற்பட்டது.

#BREAKING: நாசிக் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கசிவு.., 11 பேர் உயிரிழப்பு..!

திடீரென வாழ்வில் ஏற்பட்ட கசிவு காரணமாக 30 நிமிடங்கள் ஆக்சிஜன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், அங்கு சிகிச்சைபெற்று வந்த 11 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், தற்போது டேங்கரில் இருந்து ஆக்சிஜன் வெளியேறியதால் பற்றாக்குறை ஏற்பட்டடு மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  22 ஆக அதிகரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்