அச்சுறுத்தலை எதிர்கொள்ள ராணுவம் தயார் – ராணுவ தளபதி நரவனே

- புதிய ராணுவ தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே பதவியேற்றார்.
- பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ராணுவம் தயாராகவே உள்ளது என்று ராணுவ தளபதி நரவனே தெரிவித்துள்ளார்.
ராணுவ ஜெனரல், கடற்படை தலைமை தளபதி, விமானப் படை தலைமை தளபதி ஆகியோர் இதுவரை முப்படைகளின் தலைமை தளபதிகளாக பதவி வகித்து வருகின்றனர். இந்த முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதியாக ஒருவரை நியமிப்பது தொடர்பாக, சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்து இருந்தார்.
அதனை தொடர்ந்து முப்படைகளின் தலைமைத் தளபதி பதவியை உருவாக்கப்பட்டு அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து, முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டார்.
தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டதை அடுத்து, காலியாக உள்ள ராணுவ தளபதி பதவிக்கு மனோஜ் முகுந்த் நரவனே நியமிக்கப்பட்டிருந்தார்.அவர் ராணுவ தளபதியாக பதவியேற்றுக்கொண்டார்.இதன் பின்னர் அவர் கூறுகையில், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ராணுவம் தயாராகவே உள்ளது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள் அதன் அச்சுறுத்தல் என்ன என்பதை உணர்ந்து வருகின்றன .370வது பிரிவு நீக்கப்பட்ட பின் ஜம்மு-காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் சரிவைக் கண்டுள்ளன என்று ராணுவ தளபதி நரவனே தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025