வேளாண் சட்டங்கள்: "குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடைபெறும்"- விவசாய அமைப்புகள்!

Farmers are planning to hold a tractor rally in Delhi on Republic Day if the 7th round of talks with the central government was not resolved.

வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக மத்திய அரசுடன் 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிட்டால், குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளனர்.

அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், இன்று 39 ஆம் நாளாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய அரசு, விவசாயிகளுடன் 6 முறையாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அது எதுவும் பலனளிக்கவில்லை. வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் வரை இந்த போராட்டம் தொடரும் என விவசாயிகள் அமைப்புகள் தெரிவித்துக்கொண்டு வருகின்றனர். இதனைதொடர்ந்து, நாளை ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டவில்லை என்றால், பல்வேறு முற்றுகை போராட்டங்களை தீவிரப்படுத்த உள்ளதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிட்டால், குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், மாநில ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிடவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.